மும்பை: யெஸ் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த மார்ச் 05, 2020 அன்று, வெறும் 50,000 மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது.
அதன் பின் தான், யெஸ் பேங்க் செய்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.
கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கத் தொடங்கியதில் இருந்து... சுமார் 6,300 கோடி ரூபாய் வாரா கடனை மறைத்தது வரை பலதும் இதில் அடக்கம்.
புதிய புதிய சிக்கல்கள்
இது போக, பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஓவியங்கள், சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், லண்டனில் இருக்கும் சொத்து பத்துக்கள், பல போலி நிறுவனங்கள் என யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
வருமான வரி
இப்போது புதிதாக வருமான வரித் துறையும் இந்த பட்டியலில் இணைந்து குடைந்து எடுக்கத் தொடங்கி இருக்கிறது. அப்படி ரானா கபூர் என்ன செய்துவிட்டார்..? ஏன் வருமான வரித் துறையினர் யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரை வளைக்கிறார்கள்..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
78 கம்பெனிகள்
யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரின் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கும் 78 கம்பெனிகளின் வரவு செலவு விவரங்களை சலிக்கத் தொடங்கி இருக்கிறது வருமான வரித் துறை. ஏன் என்று கேட்டால் வரி ஏய்ப்பு இருக்குமோ எனச் சொல்கிறார்கள். எனவே தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்.
என்ன விசாரணை
எந்த அடிப்படையில் யெஸ் பேங்கின் management credit committee (MCC) அமைப்பு, இந்த மோசமான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள். ரானா கபூர் தலையிட்டு கடன் கொடுக்க வைத்தாரா..? அல்லது ஆர்பிஐ சொல்லி இருக்கும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி கடன் கொடுத்து இருக்கிறார்களா..? என்று தான் விசாரிக்கப் போகிறார்களாம்.
அமலாக்கத் துறை
இதற்கு முன், மத்திய அரசின் அமலாக்கத் துறை (Enforcement Directorate) நடத்திய விசாரணையில், ரானா கபூர், சில பல கம்பெனிகளை நடத்திய விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. மோசமான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, கடன் வாங்கிய நிறுவனங்கள் கொடுக்கும் கைமாறுகளை வாங்கிக் கொள்ள இந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications