பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவார்கள்.
கொரோனாவின் வருகைக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவில் காணப்பட்டது. எனினும் அந்த சரிவில் இருந்து மீளத் தொடங்கிய சந்தையானது, வலுவான ஏற்றத்தினைக் கண்டது.
இந்த காலக்கட்டத்தில் பல பங்குகளும் மல்டிபேக்கர் பங்குகளாக உள்ளது. அப்படி லாபம் கொடுத்த பங்குகளில் டாடா பவரும் ஒன்று.
பங்கு ஏற்றம்
டாடா பவரின் பங்கு விலையானது 30 ரூபாயில் இருந்து, 237.50 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த இரண்டு ஆண்டுகால இடைவெளியில் கிட்டத்தட்ட 700 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் கடந்த சில மாதங்களாகவே இப்பங்கின் விலையானது, செல் ஆஃப் காரணமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது உக்ரைன் - ரஷ்யா போருக்கு இடையில் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
1 1/2 மாத நிலவரம்
டாடா பவர் பங்கின் விலையானது காந்த ஏப்ரல் 6, 2022 அன்று அதன் 52 வார உச்சத்தினை எட்டியது. இதன் வரலாற்று உச்ச விலை 298.05 ரூபாயாகும். இதனை தொட்ட பிறகு சந்தையானது மீண்டும் சரியத் தொடங்கியது. இன்று இந்த பங்கின் விலையானது 237.50 ரூபாயாக உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் இப்பங்கின் விலையானது 20 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது.
ஓராண்டு நிலவரம் என்ன?
இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் விலையானது 6.50% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் இப்பங்கின் விலையானது 4.50% லாபத்தினை கொடுத்துள்ளது. எனினும் கடந்த ஓராண்டில் 104 ரூபாயில் இருந்து, 237.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 130% அதிகரித்துள்ளது.
டாடா பவரின் பங்கு விலையானது கடந்த ஏப்ரல் 3, 2020ல் 30 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 237.50 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
ஒப்பந்தம்
இந்த நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்துடன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது மேற்கொண்டு இவ்விரு நிறுவனங்களும் வளர்ச்சி காண உதவிகரமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் இவ்விரு நிறுவனகளின் வளர்ச்சி மேம்பட இது காரணமாக அமையலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications