ப்ரீபெய்டு கார்டு மோசடிகளில் சிங்கப்பூர் 5வது இடம்!! இந்தியா முதல் இடம்...

டெல்லி: வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார அடைபடையிலான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சொல்ல வோண்டும் என்றால் மோசடிகளும், ஏமாற்று வேலைகள் நிறைந்த இடத்தில் உள்ளம். இந்நிலையில் Aite மற்றும் ACI ஆகிய இரு நிறுவனங்கள் செய்த ஆய்வில் மோசடிகளால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டியலில், உலகளவில் 4-வது இடத்தைப் பெற்றவர்களாக சிங்கப்பூர்வாசிகள் உள்ளனர்.

அதே போல, ப்ரீபெய்டு கார்டுகளில் மோசடிகளை அனுபவித்து வரும் வாடிக்கையாளர்கள் பற்றிய பட்டியலில் சிங்கப்பூர் 5-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியா முதல் இடம்

இந்தியா முதல் இடம்

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சிங்கப்பூரில் ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதம் பேர் மோசடிகளை சந்தித்துள்ளனர், இந்த பட்டியலில் 18% எட்டி இந்தியா முதலிடத்திலும், 17%, 11% மற்றும் 10% பேருடன் சீனா, இந்தோனேசியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தொடர்ந்த இடங்களிலும் உள்ளன.

மெத்தனமான நடவடிக்கை

மெத்தனமான நடவடிக்கை

இந்த அளவிற்கு மோசடிகள் சிங்கப்பூரில் நிகழ்ந்து வந்தாலும், 15% பேர் மட்டுமே தங்களுடைய நிதி நிறுவனங்களை மாற்றியுள்ளனர். மற்றவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படால், அதே ப்ரீபெய்டு அட்டைகளை தங்களுடைய பர்ஸ்களில் வைத்துக் கொள்கின்றனர். இதற்கு பேக்-ஆஃப்-வாலட் (Back-of-Wallet) என்று பெயராகும்.

பேக்-ஆஃப்-வாலட்

பேக்-ஆஃப்-வாலட்

இதன் காரணமாக பேக்-ஆஃப்-வாலட் என்ற பழக்கத்தைக் கொண்டவர்களில் இரண்டாவது இடத்தை சிங்கப்பூர்வாசிகள் பெற்றுள்ளனர். இந்த பழக்கத்தைப் பொறுத்த வரையில் 86% பேருடன் சிங்கப்பூர் 2-ம் இடத்திலும், 88% பேருடன் இந்தேனேசியா முதலிடத்திலும் உள்ளது.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல வழிமுறைகள் உள்ளது இதை சரியாக கையாண்டாலே போதுமானது. இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் பண்ணுங்கோ!!!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+