சென்னை: காக்னிசெண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாக்க சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குகளை வருமான வரித் துறை முடக்கி உள்ளது. வரிச் சர்ச்சை காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதி செய்த காக்னிசென்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு மேலும் எந்த நடவடிக்கையும் காக்னிசென்ட் நிறுவனம் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
நிதி
இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கரேன் மெக்லாஃப்லின் வருவாய் நல்ல நிலையில் தான் உள்ளதாகவும், 5 பில்லியன் டாலர் அளவிற்குப் பணமாகவும், குறைந்த கால முதலீடாக இருப்பதாகவும், இந்த வரித் தொகை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பளம் மற்றும் பதவி உயர்வு
காக்னிசென்ட் நிறுவனம் சட்டப்படி பின்பற்ற வேண்டிய எல்லா நடவடிக்கைகளிலும் நெறிமுறைகள் கடைப்பிடித்து மிக உயர்ந்த தரத்துடன் வர்த்தகம் செய்து வருவதாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஊழியர்களுக்கு இந்த வரி சர்ச்சையால் சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்தப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மோசடி
2016-2017 நிதி ஆண்டில் காக்னிசென்ட் நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரியினைச் செலுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியானதை அடுத்து வருமான வரித் துறை இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது என்று செய்திகள் வெளியானது.
ஆனால் காக்னிசென்ட் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் கட்டியுள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
வழக்கு
வருமான வரித் துறை காக்னிசென்ட் நிறுவனத்தின் சில வங்கி கணக்கினை முடக்கிய உடன், காக்னிசென்ட் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில் காக்னிசென்ட் நிறுவனம் மீது மீண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
வணிகச் செயல்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லை
வருமான வரி துறையினர் எடுத்துள்ள நடவடிக்கையினால் காக்னிசென்ட் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தனர்.
தகவல் அளிக்க மறுப்பு
வருமான வரி துறையினரை இது குறித்துத் தொடர்புகொண்டு முழு விவரங்களைப் பெற முடியாத நிலையில் காக்னிசென்ட் நிறுவனமும் பல முக்கியக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
ஊழியர்கள்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசென்ட் நிறுவனத்தில் அதிகபட்சமாக 2,60,000 இந்திய ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் படிக்கும் போதுசம்பாதிக்கலாம்
பான் - ஆதார் இணைப்பு
ஏர் இந்தியா அதிரடி..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications