இந்தியா முழுவதும் அதிரடி கிளப்பிய கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடை விதித்த பின்பு பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி முடிவிற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையில் கூட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்யக் கூடாது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு பொறுப்பில்லை எனவும் கூறினார்.
ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி விர்ச்சுவல் கரன்சி எனப்படும் கிரிப்டோகரன்சி குறித்து இவ்விதமான ஆய்வு செய்யாமலேயே இதன் வர்த்தகத்திற்குத் தடை விதித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
வருண் சேத்தி
ஸ்டார்ட்அப் கன்சல்டன்ட் ஆக இருக்கும் வருண் சேத்தி ஏப்ரல் 9ஆம் தேதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்யும் முன் அதுகுறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா என அவர் கேள்வி கேட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி பதில்
இதிற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி மீது தடை செய்யப்பட்ட போது எவ்விதமான ஆய்வு, ஆலோசனையும் செய்யலில்லை. மேலும் கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் குறித்து ஆய்வு செய்ய எந்த ஒரு குழுவும் ரிசர்வ் வங்கி அமைக்கவில்லை எனக் கூறியுள்ளதாக வருண் சேத்தி தெரிவித்துள்ளார்.
இவர் பிளாக்செயின்லாயர்.இன் தளத்தின் நிறுவனர் ஆவார்.
தடை
ஏப்ரல் 6ஆம் தேதி வங்கிகள், ஈவேலெட், பேமென்ட் கேட்வே ஆகியவை விர்ச்சுவல் கரன்சி வர்த்தகத்திற்கு எவ்விதமான உதவியும், சேவையும் அளிக்கக் கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டது.
எக்ஸ்சேஞ்ச்
இதன் எதிரொலியாக வங்கிகள் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சேவைகளை முழுமையாகத் தடை செய்தது. இதனை எதிர்த்து எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூலை 20ஆம் தேதி வருகிறது.
முற்றிலும் தவறு..
கிரிப்டோகரன்சி பற்றியும், பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றியும் எவ்விதமான ஆய்வும், ஆலோசனையும் செய்யாமல் இதனால் ஏற்பட்டும் சாதகபாதகங்களைத் தெரிந்துகொள்ளாமலேயே தடையை விதித்துள்ளது முற்றிலும் தவறானது.
தடை நீடிக்குமா..?
ஜூலை 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பின்பு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களின் நிலை என்ன..? விர்ச்சுவல் கரன்சி வர்த்தகம் மீதான தடை தொடர்ந்து நீடிக்குமா ஆகியவை தெரியவரும்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications