இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் கடன் வழங்குவதில் குறிப்பாக அதிகத் தொகைக்குக் கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் ரிச்ர்வ் வங்கியும் கடன் மற்றும் இதர வங்கி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து சந்தேகக்கிகப்படும் வங்கிகளைக் கண்காணிப்பில் வைக்கிறது.
இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டின் டிசம்பர் வரையிலான 9 மாதம் வரையில் எந்த வங்கியில் அதிகப்படியான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 வங்கி, நிதி நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் 27 வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 2022ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 34,097 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடிகள் நடந்துள்ளது. இதற்காகச் சுமார் 96 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த 9 மாத காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகபட்சமாக ரூ.4,820 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளைப் பதிவு செய்திருந்தாலும், பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 13 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
பகவத் காரத்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், வங்கி வாரியாக ரூ.100 கோடிக்கு மேல் நடந்த மோசடி விவரங்களைத் தெரிவித்தார். இதில் மதிப்பீட்டின் படி பஞ்சாப் நேஷனல் வங்கியும், வழக்குகள் படி பேங்க் ஆஃப் இந்தியா அதிகப்படியான மோசடிகளைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
மத்திய அமைச்சர் பகவத் காரத் வெளியிட்டுள்ள தரவுகள் படி பஞ்சாப் நேஷனல் வங்கி 10 வழக்குகள் கீழ் 4820 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியா 13 வழக்குகள் கீழ் 3925 கோடி ரூபாயும், யெஸ் வங்கி 11 வழக்குகள் கீழ் 3869 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8 வழக்குகள் கீழ் 3902 கோடி ரூபாயும், கனரா வங்கி 5 வழக்குகள் கீழ் 2658 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications