எளிதாகக் கூறவேண்டுமானால், தனிநபர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்களில் வாங்கும் பாதுகாப்பற்ற கடன் தான் தனிநபர் கடன் இதனை பர்சனல் லோன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த வகை கடன் வருவாய் மட்டம், கிரெடிட் ஸ்கோர், வேலை மற்றும் திருப்பி செலுத்தும் திறன் போன்ற அடிப்படை காரணிகளை வைத்து வழங்கப்படுகிறது.
வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் போல இல்லாமல், தனிநபர் கடனுக்கு உத்திரவாதமாக எந்தவொரு சொத்தும் இருக்காது. இது பாதுகாப்பற்றது என்பதாலும், கடன் பெறுபவர் அடமானமாக தங்கம் அல்லது சொத்தை வைக்க வேண்டியதில்லை என்பதாலும், கடனை திரும்ப செலுத்தாத போது கடன் தருபவர் அவரின் எந்த சொத்தையும் ஏலம் விட முடியாது. தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்பது, வீடு, கார் மற்றும் தங்க கடனை விட அதிகமாக இருக்கும். ஏனெனில் மோசடி செய்யும் போது அது பெரிய ஆபத்தாக முடியும்.
மற்ற கடன்களை போல இல்லாமல், இந்த தனிநபர் கடன் உங்களின் கடன் அறிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் எதிர்காலத்தில் கடன் அட்டை அல்லது பிற கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த வகை கடனை தவிர்ப்பது நல்லது.
இந்த வகை கடனில் பெறும் பணத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விடுமுறை கால செலவு, மின்னணு சாதனங்கள் வாங்க, மருத்துவ செலவு, வீடு மறுசீரமைப்பு, திருமணம், குழந்தைகளின் கல்வி என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பற்ற கடன் வகையைச் சேர்ந்த தனிநபர் கடன் என்பது உங்களுக்குப் பணம் எதுக்குத் தேவைப்பட்டாலும் பயன்படுத்துவது ஆகும். புதிய போன் வாங்கவேண்டும் என்றாலும், வீடு மறுசீரமைப்பிற்கும் என அனைத்துக்கும் இதைப் பயன்படுத்தலாம். பெரும்பாலானோர் தங்களுக்கு உடனடியாகப் பணம் தேவைப்படும் போது தனிநபர் கடனை தேர்வு செய்கின்றனர்.
இப்படிச் சாமானியர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் இந்தப் பர்சனல் லோன் எனக் கூறப்படும் தனிநபர் கடனின் வகைகள், தேவையான ஆவணங்கள், தேவையான தகுதிகள் எனத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
தனிநபர் கடன் பெறும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடிப்படை ஆவணங்கள் பின்வருமாறு:
* முகவரி ஆவணம்: தொலைப்பேசி கட்டண இரசீது/ மின் கட்டண இரசீது/ வீட்டுவாடகை ஒப்பந்தம்/ ரேசன் அட்டை
*அடையாள ஆவணம்: கடவுச்சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ ஃபான் அட்டை/ ஆதார் அட்டை
*வருமான சான்றிதழ் : கடைசி 3 மாத சம்பள சான்றிதழ்/ கடைசி 2ஆண்டுகளுக்கான வருமானவரி தாக்கல் படிவம்/ படிவம்16
*சம்பள கணக்கு/முக்கிய வங்கி கணக்கின் கடைசி 6 மாத வங்கி அறிக்கை
* ஏற்கனவே எடுத்த வங்கிகடன் பற்றிய தகவல்கள்(கடைசி 1 ஆண்டிற்கான வங்கி கடன் கணக்கு அறிக்கை மற்றும் கடன் வழங்கியதற்கான அத்தாட்சி கடிதம்)
பணி தொடரல் ஆவணம்: நடப்பு பணி சேர்க்கை கடிதம்/ உத்தியோக சான்றிதழ்
கல்வி ஆவணம்: பட்டப்படிப்பு/ கல்வி சான்றிதழ்கள்
ஒவ்வொரு தேவைக்கும் ஏற்றவாறு பலவித தனிநபர் கடன்கள் கிடைக்கின்றன.
தற்போது பொதுவாகக் கிடைக்கும் சில கடன்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் திருவிழாக்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கும் நிலையில், அவற்றைப் பெரிதாகவும் உற்சாகமாகவும் கொண்டாடும் போது, மறைமுகமாக ஏராளமான செலவுகளுக்கு வழிவகுக்கும். அந்தச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அளவுகடந்து செலவுகள் செய்யப்படாது என்பதால், இவ்வகைக் கடனுக்கான அதிகபட்சத் தொகை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவாகவே வங்கிகள் நிர்ணயிக்கின்றன.
*கால அளவு: 1 ஆண்டு
*வட்டிவிகிதம்: வங்கிக்கேற்ப மாறுபடும்
*குறைந்தபட்ட கடன் தொகை: ரூ5,000
*அதிகபட்ச தொகை: ரூ50,000
*பரிசீலனை கட்டணம்: 2%வரை
*முன்தவணை கட்டணம்:3% வரை
வீட்டை புதுப்பித்தல் என்பது தினந்தோறும் செய்யக்கூடியது அல்ல, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் ஒரு சமயத்தில் சிறப்பாகச் செய்ய வேண்டும். உங்கள் சேமிப்பை கரைக்காமல் வீட்டை புதுப்பிக்க வீடு புதுப்பித்தல் கடன் உதவுகிறது. இதிலுள்ள மற்றொரு பலன் என்னவென்றால், இதற்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ30,000 வரை வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
*கால அளவு: 20 முதல் 30 ஆண்டுகள்
*வட்டிவிகிதம்: 10-12%
*அதிகபட்ச தொகை: மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80%
*பரிசீலனை கட்டணம்: கடன் தொகையில் 0.5% - 1%
*முன்தவணை கட்டணம்: இல்லை
பெயருக்கு ஏற்ற வகையில், இந்த வகைக் கடனுக்கு அதன் முழுக் கால அளவிற்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம் தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கியப் பலன் என்னவென்றால், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும் போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.
*கால அளவு: 5 முதல்10 ஆண்டுகள்
*வட்டிவிகிதம்: 9.95% முதல் 11.75%
*பரிசீலனை கட்டணம்: கடன் தொகையில் 1%வரை
*முன்தவணை கட்டணம்: மீதமிருக்கும் அசலில் 2% வரை
சந்தையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வெளியாகிக்கொண்டே உள்ளன. அப்படி வரும் மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களில் எப்போதும் புதிதாக வெளியானவற்றையே பயன்படுத்த விரும்புபவரா நீங்கள்? ஆம் எனில் அதற்குத் தேவைப்படும் பணத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் தேவைகளைப் பூரத்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவை தான் இந்த நுகர்வோர் நீடிப்புக் கடன்.
*கால அளவு: 2 ஆண்டுகள் வரை
*குறைந்தபட்ட கடன் தொகை: ரூ8,000
*அதிகபட்ச தொகை: ரூ5 லட்சம்
*பரிசீலனை கட்டணம்: கடன் தொகையில் 2.5%வரை
*குறிப்பு : இது வங்கிக்கேற்ப மாறுபடும்.
பெரும்பாலானோர் தங்களின் திருமணம் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என நினைப்பர் ஆனால் அதற்காகச் செலவிட அதிகப் பணம் இருக்காது.
எனவே திருமணத்திற்குத் தேவையான ஆடைகள் மற்றும் நகைகள் வாங்குவது, அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்ட செலவுகளைப் பார்த்துக்கொள்ள உதவுகிறது திருமணக்கடன். தங்களின் திருமணச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்த பெரும்பாலானோர் இந்தக் கடனைப் பெறுகின்றனர்.
*கால அளவு: 1 முதல் 5ஆண்டுகள்
*வட்டிவிகிதம்: 10.5 - 34%
*குறைந்தபட்ட கடன் தொகை: ரூ5லட்சம்
*அதிகபட்ச தொகை: ரூ30 லட்சம்
*பரிசீலனை கட்டணம்: கடன்தொகையில் 0.5% முதல் 2.5%வரை
*முன்தவணை கட்டணம்: மீதமுள்ள கடன் தொகையில் 2 முதல் 5% வரை
உங்களின் அடுத்தக் குடும்பச் சுற்றுலாவில் அனைத்து சேமிப்புகளையும் செலவளிக்க விரும்புகிறீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் விடுமுறைக்காலக் கடனை பயன்படுத்திச் சேமிப்பை வீணாக்காமல் விடுமுறையைக் கொண்டாடலாம். மற்ற கடன் வகைகளுடன் ஒப்பிடும் போது இது அதிக வட்டிவிகிதமுள்ளது என்ற போதிலும், சம்பள உயர்வு அல்லது போனஸ் சீக்கரத்தில் வரும் என்றால் அதைப் பயன்படுத்த கடனை விரைவில் அடைத்துவிடலாம். இந்த வகைக் கடனின் மொத்த கடன் தொகை, நீங்கள் பயணம் செல்லவுள்ள இடம் மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்தது.
*கால அளவு: 2 முதல் 3ஆண்டுகள்
*வட்டிவிகிதம்: 12.95- 14.20%
*குறைந்தபட்ட கடன் தொகை: ரூ10,000
*அதிகபட்ச தொகை: ரூ2- 10 லட்சம்
*பரிசீலனை கட்டணம்: கடன்தொகையில் 2%(ரூ1000 முதல் ரூ10,000வரை சேவைக் கட்டணம்)
*குறிப்பு: இது வங்கிக்கேற்ப மாறுபடும்
தனிநபர் கடனில் உத்திரவாதம் எதுவும் தேவைப்படாது என்பதால் பாதுகாப்பற்ற கடன் வகையான இதில் தொழில்கடன் பெறுவது நல்ல முடிவாக இருக்கும். உங்கள் தொழிலை விரிவாக்க நினைக்கும் போது இந்தக் கடன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் புதிதாகத் தொழில்துவங்க விரும்பினாலும், உங்களின் நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்ள இந்தத் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கடன் தொகையானு உங்களின் தகுதி மற்றும் கடன் வரலாற்றை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
*கால அளவு: 1 முதல் 6ஆண்டுகள்
*வட்டிவிகிதம்: 17- 22%
*குறைந்தபட்ட கடன் தொகை: ரூ50,000
*அதிகபட்ச தொகை: ரூ75 லட்சம்
*பரிசீலனை கட்டணம்: கடன்தொகையில் 2.5%வரை
மேலே குறிப்பிட்டுள்ள பொதுவான ஆவணங்கள் தவிர்த்து, தொழில் கடனுக்குக் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைக் கூடுதலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
* கடைசி 6 மாத வங்கி அறிக்கை
*தணிக்கையாளரிடம் அங்கீகாரம் பெற்ற கடைசி இரண்டு ஆண்டுகளுக்கான வருமானவரி தாக்கல் ஆவணங்கள்
*தொடரல் ஆவணம்(வருமானவரி தாக்கல் ஆவணம்/வர்த்தக உரிமம்/ஸ்தாபனம்/விற்பனைவரி சான்றிதழ்)
*தனியுரிமை ஆவணம்/ கூட்டு ஒப்பந்தத்தின் நகல்
*அசல் ஒப்பந்தம் மற்றும் அதனுடன் சேர்ந்த பிரிவுகள்