டெல்லி: சகாரா நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள 4 சொத்துக்களை விற்று 2,710 கோடி ரூபாய் நிதியை திரட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இத்தொகை இந்நிறுவன தலைவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர தேவைப்படும் 10,000 கோடி ரூபாய் நிதிக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.
சொத்துக்கள்
இந்நிறுவனத்தின் ஜோத்பூர், புனே, குர்கான் மற்றும் மும்பை பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்க சுப்ரீப் கோர்ட் கடந்த ஜூன் 4ஆம் தேதி அறிவித்ததன் படி நேற்று இதற்கான டீல் முடிந்தது.
மே 2015
மேலும் இந்நிறுவனம் விருப்பப்படும் அனைத்து சொத்துக்களும் வருகிற மே 2015ஆம் ஆண்டிற்குள் விற்கப்பட்டு இருக்க வேண்டும், இதற்கான காசோலைகளை செபி-சகாரா ரீபண்ட் கணக்கின் பெயரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும் நீதி மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
முன்பணம்
மேலும் இந்த 4 சொத்துக்களின் விற்பனைக்கான முக்கூட்டிய தொகையாக சுமார் 184.5 கோடி ரூபாய்க்கான காசோலையை நீதிபதி தேவ் மற்றும் சிக்கிர் தலைமையிலான அமர்வில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் சீனா
மேலும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் பேரில் பாங்க் ஆஃப் சீனா விடம் இருந்து சுமார் 650 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெறவும் இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
சகாரா நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு செய்த மோசடிக்காக இந்நிறுவனத்தின் தலைவர் சப்ரதா ராய் மற்றும் இரு துணை தலைவர்களையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
10,000 கோடி
இவர்கள் பெயில் மூலம் வெளியில் வர சுப்ரீம் கோர்ட் செபியிடம் 5,000 கோடி ரூபாய் பணமாகவும், 5,000 வங்கி பிணையத்தை அளிக்க வேண்டும் உத்தரவிட்டது. இதன் படி இந்நிறுவனம் உள்ளநாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை விற்க தற்போது முயற்சி செய்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications