உலகில் எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத சினிமா மீதான காதல் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் சிறு வயதினர் முதல் பெரியவர்களை வரை அனைவரும் சினிமாவை ரசித்து லயத்து பார்க்கும் வழக்கும் நாம் நாட்டில் அதிகம்.
ஆனால் சினிமாவிற்கான டிக்கெட் வாங்குவது எவ்வளவு கடினம் முந்தைய தலைமுறையைக் கோட்டால் தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்க்க ஊர் முழுவதும் வரும் நிலையில் 200, 300 டிக்கெட் மட்டுமே விற்கப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சூப்பர்ஸ்டார் படம் வந்தால் எப்படி இருக்கும், கட்டுக்கு அடங்காத கூட்டம் வரும். இதில் டிக்கெட் வாங்குவது மிகவும் கடினம்.
ஆனால் இதை அனைத்தையும் மாற்றிய, நொடிகளில் டிக்கெட் புக் செய்யும் வகையில் தற்போது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவையை உருவாக்கிய பெருமை ஆஷிஷ் ஹேம்ராஜானியை மட்டுமே சேரும்.