மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தியாவில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 1 முதல் இப்புதிய உத்தரவு அமலாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டோல் பிளாசா வாயிலாகச் செல்லும் அனைத்து வாகனங்களின் விண்ட்ஷீல்ட்-லும் பாஸ்டேக் ஒட்டியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனால் பாஸ்டேக் இல்லாமல் செல்லும் வாகனங்கள் டோல் பிளாசாவில் இருக்கும் ஹைபிரிட் வழியில் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் மட்டுமே பணத்தைக் கொடுத்து டோல் கட்டணம் செலுத்த முடியும்.
பாஸ்டேக் கட்டாயம்
மத்திய அரிசின் புதிய அறிவிப்பின் கீழ் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து M மற்றும் N ரக வாகனங்களுக்கு, குறைந்தபட்சம் 4 சக்கரம் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் CMVR 1989 சட்டத்தின் கீழ் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
M மற்றும் N ரக வாகனங்கள்
M ரக வாகனங்கள் என்றால் பயணிகளுக்குப் போக்குவரத்து சேவை அளிக்கும் 4 சக்கரங்கள் கொண்ட மோட்டார் வாகனங்கள், N ரக வாகனங்கள் என்றால் சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களாகும். மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாகியுள்ளது.
ஹைபிரிட் வழித்தடம்
எனினும் மக்களுக்கு இந்த மாற்றம் ஏதுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு டோல் பிளாசாவில் இருக்கும் ஹைபிரிட் வழித்தடத்தில் வருகிற பிப்ரவரி 15, 2021 வரையில் டோல் கட்டணத்தை பணம் மூலம் செலுத்தலாம்.
புதிய கட்டுப்பாடுகள்
இதேபோல் பார்ம் 51 கீழ் வாகனங்களுக்கு 3ஆம் தரப்பு இன்சூரன்ஸ் பெற பாஸ்டேக்கை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இந்தப் பார்ம் 51 மூலம் பாஸ்டேக் ஐடியை கைப்பற்ற முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.
டிசம்பர் 24, 2020
இந்தியாவில் புதிய வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 24, 2020ல் முதல் முறையாக சுமார் 50 லட்ச பரிமாற்றங்கள் மூலம் ஓரே நாளில் சுமார் 80 கோடி ரூபாய் அளவிலான டோல் கட்டணம்
வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் தற்போது 2.22 பாஸ்டேக் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.