பணம் ஒரு மாயை என்று யாரேனும் கூறினால், அவர் உண்மையில் ஒரு யோகியாகத்தான் இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் யார்தான் பணக்காரராக விரும்ப மாட்டார்கள். நீங்கள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுப்பதன் மூலம் அல்லது லாட்டரியில் வெற்றி மூலம் பெரும் பணக்காரனாக முடியாது. நீங்கள் பணக்காரராக விரும்பினால் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.
நீங்கள் பெரும் பணக்காரராகத் தீர்மானத்தால், நீங்கள் உங்கள் நிதி நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து உங்களுடைய செல்வச் செழிப்பை மேம்படுத்த தொடங்க வேண்டும்.
இந்த ஆண்டு முதல் உங்களுடைய பெருங்கனவை காப்பாற்ற, அதிகமாகச் சேமியுங்கள் மற்றும் அதிகமாகச் சம்பாதிக்கத் தொடங்குங்கள். இங்கே இந்த ஆண்டு முதல் உங்களை நிச்சயமாகப் பணக்காரனாக மாற்றக் கூடிய நான்கு மிக முக்கியத் தீர்மானங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.
சேமிக்கத் தொடங்கவும்
2016ம் ஆண்டில் உங்களுடைய சேமிப்பு வருமானத்தில் சுமார் 10 சதவீதம் எனில் அதை 2017ம் ஆண்டில் சுமார் 11 முதல் 12 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடுங்கள்.
நீங்கள் உங்களுடைய செல்வத்தை அதிகரிக்க வேண்டுமெனில், சேமிப்பை அதிகரிக்கப்படுத்த வேண்டும். இதை ஒரு தவமாகவே மேற்கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.
உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியைச் சேமியுங்கள்
உங்கள் சேமிப்பு விகிதத்தை ஒரு இலக்கு வைத்து அதிகப்படுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.
செலவுகளைக் கண்காணியுங்கள்
இந்த ஆண்டு முதல் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய பெரிய செலவினங்களைக் குறைப்பதற்கு உதவி புரியும். இந்தப் பழக்கத்தை மேற்கொள்ள உங்களுக்குச் சிறிது காலம் தேவைப்படும். எனினும் நீங்கள் இதை நோக்கிய உங்களுடைய பயணத்தை இப்பொழுதே தொடங்க வேண்டும். உங்களுடைய சேமிப்பை மேம்படுத்திப் பெரிய செலவுகளைக் குறைத்திடுங்கள்.
பல்வேறு வருமான ஆதாரங்கள்
உங்களுக்குப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் பெறக்கூடிய வருமானத்தின் முக்கியத்துவம் தெரிய வேண்டும். இது வரை அதைப் பற்றி யோசிக்கவில்லை எனில் அதை இன்றே முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பணக்கார கனவை நனவாக்க பல்வேறு நிதி ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் கண்டிப்பாக உதவி புரியும். எனவே இனே இப்பொழுதே மற்றொரு வேலை அல்லது தொழிலை தொடங்க முயற்சி செய்யுங்கள்.