பிரிட்டன் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லேபர் கட்சி, பிஜேபி போல் அல்லாமல், தூத்துக்குடி மக்களின் போராட்டம், மக்களின் உயிர் இழப்பு ஆகியவற்றைக் கண்டு லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஜான் மெக்டனெல்
பிரிட்டன் நாட்டின் shadow chancellor ஆக இருக்கும் ஜான் மெக்டனெல், லண்டன் பங்குச்சந்தையின் மரியாதையைக் காக்கும் வகையில் அயோக்கிய நிறுவனமான வேதாந்தா ரெசோர்ஸை பங்குச்சந்தை விட்டு நீக்க வேண்டும். இந்நிறுவனம் பல வருடங்களாக முறையற்ற வகையில் சுரங்க தொழில் செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
shadow chancellor என்னும் பதவி எதிர்க்கட்சி தலைவருக்குக் கொடுக்கப்படும்.
படுகொலை
தென் இந்தியாவில் தூத்துக்குடி பகுதியில் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் இந்நிறுவனத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதாந்தா நிறுவனத்தை உடனடியாக லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கி பங்குச்சந்தை நிர்வாகம் தனது கடமையைச் சரியாகச் செயல்பட வேண்டும் என ஜான் மெக்டனெல் எனக் கூறியுள்ளார்.
முக்கிய அமைப்பு
மேலும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் வேதாந்தா நிறுவன எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் இறந்த நிலையில், இந்தியா, ஜாம்பியா, மற்றும் இன்னும் சில நாடுகளில் இந்நிறுவனம் மனித உரிமை மீறல், சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆகியவற்றைச் செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் மீது Amnesty International போன்ற சர்வதேச NGO அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
..." data-gal-src="http:///img/600x100/2018/05/sterlite-protestdhhb-1527429350.jpg">