ஞாயிற்றுக்கிழமை இரவு நிதி ஆயோக்கின் தலைவர் டாக்ட்டர் ராஜிவ் குமார் பொருளாதார நிபுணர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த பனகாரியா தான் நிதி ஆயோக்கின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே ராஜிவ் குமார் அவர்கள் யார், என்ற முழு விவரங்களையும் இங்கு உங்களுக்காகத் தொகுத்து வழங்குகின்றோம்.
படிப்பு
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் DPhil மற்றும் லக்னோ பல்கலைக் கழகத்திலிருந்து பிஎச்டி பட்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். மேலும் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த தலைவர் பதவியையும் வகித்து வருகின்றார்.
பணி அனுபவம்
முன்னதாக, அவர் FICCI இன் செயலாளராக இருந்தார் மற்றும் ICRIER இன் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் இயக்குநராகவும் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் 2006 மற்றும் 2008 க்கு இடையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
வங்கி முதல் அமைச்சகம் வரை
அவர் இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பின் தலைமை பொருளாதார வல்லுநராகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியிலும், இந்திய கைத்தொழில் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
பல முக்கிய நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்
அவர் ரியாத்தில் கிங் அப்துல்லா பெட்ரோல் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் சென்டர், ஜகார்த்தாவில் ஆசியான் மற்றும் ஆசியாவின் பொருளாதார ஆராய்ச்சிக் கழகம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் வெளிநாட்டு வர்த்தக இந்தியக் கல்வி நிறுவனம் உட்படப் பல சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களில் உறுப்பினராகவும் உள்ளார்.
அரவிந்த பனகாரியா
நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி தான் வெளியேற இருப்பதாகவும் மீண்டும் தான் ஏற்கனவே பணியற்று வந்த கொலம்பியா பல்கலைக் கழகத்திற்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார்.