ஆதார் தகவல்கள் திருடுபோவதாகவும், தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் இந்திய தனிநபர் அடையாள அமைப்பான யூஐடிஏஐ ஆதார் எண்ணிற்குப் பதிலாக விரிச்சுவல் அடி அமைப்பு என்ற முறையினை அறிமுகம் செய்தது.
கேஒய்சி ஆவணமாக ஆதார் எண்ணை கேடுகும் நிறுவனங்கள் இந்த விரிச்சுவல் ஐடி அமைப்பினை தங்களது மென்பொருளில் மாற்றி அமைக்க ஜூலை 1 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விரிச்சுவல் அடி அமைப்பு
விரிச்சுவல் அடி அமைப்பு அமலுக்கு வந்த பிறகு ஆதார் எண்ணை அளிப்பதற்குப் பதிலாக ஆதார் எண் போன்று தற்காலிகமாக அளிக்கப்படும் விரிச்சுவல் எண்ணை அளிக்கலாம். இதனால் ஆதார் கார்டுகள் கட்டாயம் கைகளில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஜூன் 1
முன்பு இந்திய தனிநபர் அடையாள அமைப்பான யூஐடிஏஐ ஆதார் எண்ணை கேஒய்சி ஆவணமாகப் பெறும அனைத்து ஏஜென்சிகளும் விரிச்சுவல் ஐடி அமைப்பினை 2018 ஜூன் 1-க்குள் நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
யூஐடிஏஐ
விரிச்சுவல் ஐடி சேவையினைத் துவங்க யூஐடிஏஐ தயாராக உள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தும் ஏஜென்சிகள் தயாராகக் காரணங்களினால் இந்தக் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட இருப்பதாக ஆதார் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆதார் பயன்படுத்தும் ஏஜென்சிகள்
ஆதார் எண்ணை டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகள், மத்திய அரசு போன்ற பல ஏஜென்சிகள் கேஒய்சி ஆவணமாகப் பெறுகின்றன. இவர்களுக்கு அதனைப் புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களால் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.