இன்று காலைப் பங்கு சந்தைத் துவங்கியதில் இருந்து 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் பிற்பகல் 2:36 மணி நிலவரத்தின் படி 1.10 சதவீதம் என 375.21 புள்ளிகள் சரிந்து 34,381.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இது எப்படி நடந்தது மற்றும் எந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகப் பரிவர்த்தனையினைச் செய்துள்ளன என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
எஸ்பிஐ
மத்திய அரசு அன்மையில் எஸ்பிஐ வங்கிக்கு மறு மூலதனதிட்டம் மூலமாக 8,800 கோடி ரூபாயினை அளிக்க இருப்பதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம். அதன் படி தனது மூலதனத்தினை பெறுவது குறித்து முக்கிய கூட்டம் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி நடைப்பெற இருக்கிறது.
இன்று பிற்பகல் 2.42 மணி நிலவரத்தின் படி எஸ்பிஐ வங்கியில் 195.95 கோடி மதிப்புள்ள 6,829,416 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.
டிசிஎஸ்
எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக டிசிஎஸ் நிறுவனத்தில் 146.14 கோடி மதிப்புள்ள 4,83,825 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
மாருதி
மாருதி நிறுவனத்தில் 150.67 கோடி மதிப்பிலான 1,49,114 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ்
முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 82.66 கொடி ரூபாய் மதிப்பிலான 9,34,531 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்கள்
இதே போன்று பிற முக்கிய லார்ஜ் கேப் நிறுவனங்களான சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக இன்று பரிவர்த்தனை செய்துள்ளன.