உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்திய டெலிகாம் துறையினைப் புரட்டிப்போட்ட நிறுவனம் என்று ரிலையன்ஸ் ஜியோ பற்றிப் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே நேரம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் ரத்த கண்ணீர் வடிக்க இவர்கள்தான் காரணம்.
இலவசங்கள் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ந்து இருந்தாலும் அன்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் துவங்க யார் என்ற காரணத்தினை முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அம்பானி குடும்பத்தினருக்கு வந்த இணையதளச் சிக்கல்
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி யேல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் போது விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது படிப்பு நிமித்தமாக ஒரு ஆய்வு செய்ய வேண்டி இருந்த நிலையில் இணையதளச் சேவை துண்டிப்பு ஏற்பட நமது வீட்டில் இணையதளச் சேவைச் சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் அம்பானி
மகள் இந்தியாவில் இருந்த இணையதளச் சேவை பற்றிப் புலம்பிய நிலையில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி டிஜிட்டல் உலகில் குரல் அழைப்புகளைத் தவிர மேலும் நிறைய இருக்கிறது என்றும் அது உங்கள் தலைமுறைக்குக் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.
இஷா அம்பானி
2011-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ குறித்த எண்ணத்தினைத் தன்னுடன் தனது மகள் இஷா அம்பானி பகிர்ந்து கொண்டதாகவும் அது 2016-ம் ஆண்டு நிறைவேறியதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ
அவரது குழந்தைகளுடன் உரையாடியது முகேஷ் அவசியமானதாக இருந்த நிலையில், இந்தியாவின் இளைய தலைமுறையினர் ஜியோ டெலிகாம் சேவை அறிமுகத்தினைப் பெரும் அளவில் தற்போது வரவேற்று வருகின்றனர். இந்தியாவின் இளைய தலைமுறையினர் மிகவும் ஆக்கப்பூர்வமான, மிகவும் இலட்சியமான மற்றும் உலகில் சிறந்தவர்களாக ஆவதற்கு மிகவும் பொறுமையற்றவர்கள் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
வாடிக்கையாளர்கள்
எந்த வழிகளில் எல்லாம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்ற ஆராய்ச்சியில் ஜியோ நிறுவனம் 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுச் சாதானை படைத்துள்ளது என்றும் தற்போது இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மொபைல் தரவு
மொபைல் தரவு பயன்படுத்துவது 155-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஆம், ஜியோ நிறுவனம் வருகைக்குப் பிறகு இந்தியா ஸ்மார்ட்போன்கள் அதிகத் தரவை பயன்படுத்தி வருகின்றன.
ரிலையன்ஸ்
1966-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தினை தனது அப்ப திருபாய் அம்பானி 1,000 ரூபாய் முதலீட்டில் துவங்கியதாகவும் அது தற்போது 5.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். திருபாய் அம்பானி 15 வயதில் பள்ளியில் படித்து வந்த போது அவர் வீட்டின் அருகில் இருந்த மலை கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு பக்கோடா, பஜ்ஜி போன்றவற்றை விற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
பக்கோடா விற்றால் அம்பானியும் ஆகலாம்
திருபாய் அம்பானியின் வியப்பூட்டும் கதை
அடுத்த அம்பானி..!