உலகப் பொருளாதாரச் சந்தையில் சீனா, இந்தியாவை விடவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான காரணம்..? இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் அவர்களின் பெல்ட் மற்றும் சாலை திட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் புதிய கடல்வழி திட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஆர்டிக் பாலிசி என்னும் ஆய்வுக்கட்டுரையை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இப்புதிய திட்டத்திற்கு அடித்தளமிட்டுள்ளது சீனா.
ஊக்குவிப்பு
இந்த ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டதன் மூலம் நிறுவனங்கள் ஆர்டிக் பகுதியில் புதிய கட்டுமானத்தையும், வர்த்தகப் போக்குவரத்து பாதையையும் அமைக்க நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு அளித்துள்ளது. இதனைப் போலார் சில்க் ரோடு என்ற பெயரில் வழிநடத்தவும் சீனா முடிவு செய்துள்ளது.
போலார் சில்க் ரோடு
போலார் சில்க் ரோடு திட்டத்தின் வாயிலாகச் சீனா ஆர்டிக் பகுதியில் புதிய கப்பல் வழித்தடத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தையும் உருவாக்கவும் முடியும் என நம்புவதாகச் சீன அரசு தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது,
2013 முதல்..
ஆர்டிக் வழித்தட வர்த்தகத்தில் பெரிதும் ஆர்வம் கொள்ளாத சீனா, 2013ஆம் ஆண்டு முதல் ஆர்டிக் கவுன்சில் அமைப்பில் இணைந்து தனது ஆர்வத்தைக் காட்டியது.
இந்த வழித்தடத்தில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருநாடுகளுக்கும் இயற்கை எரிவாயு வர்த்தகம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
20 நாட்கள்
மேற்கு பகுதியின் வாயிலாகப் பயணம் செய்யும் போது, இயல்பான சூயீ வாய்கால் வழி பயணத்தை விடவும் சுமார் 20 நாட்கள் குறைவான பயண நாட்களே தேவைப்படும். இதன் மூலம் சீன பல வர்த்தக வாய்ப்புகளைப் பெறும் எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications